Posts

Showing posts from March, 2018

நகைச்சுவை தொடர்: 1. கைப்பேசி

Image
C.Saravanan     கைப்பேசி தொலைந்து போனால் புதியதாக வாங்கிக்கொள்ள முடியும்.  ஆனால் , அதில் உள்ள தொடர்பு எண்களை எப்படி மீட்க முடியும் ?  மனைவியின் கைப்பேசி எண்ணைக்கூட நாம் நினைவில் வைத்துக் கொள்வதில்லையே!    கைப்பேசியைத் தொலைத்தவர்கள் படும் பாட்டைப் பார்த்தால் தெரியும் , அதன் பாதிப்பு என்னவென்று. அதனால் , வெளியூர் பயணத்தின் போது கைப்பேசியை யாராவது எடுத்து விடுவார்களோ என்று சட்டைப் பையை அடிக்கடி தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டே இருப்பது என் வழக்கம்.  இது எனக்கு ஒரு அ னி ச்சைச்  செயல் போல் ஆகிவிட்டது. இன்றும் இப்பழக்கம் தொடர்கிறது.    எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்யும்போது , வழக்கம்போல சட்டைப் பையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.  என் அருகில் அமர்ந்தவர் ஒரு நிறுத்தத்தில் இறங்கியதால் , நடுத்தர வயதுடைய பெண் ஒருத்தி என் அருகில் அமர்ந்தாள்.   என்னைப்போல் அவளும் அவ்வப்போது அவளுடைய ஜாக்கெட்டைத் தொட்டுத் தொட்டுப் பார்த்த்துக் கொண்டே இருந்தாள். என்னுடைய செய்கையைக் கிண்டல்...

எதைப் படிக்க வேண்டும்?

Image
Saravanan. C ( தமிழச்சி , 2010   ஜ ø லை இதழில்   வெளிவந்த   எனது   கட்டுரை )        நாள்தோறும் புற்றீசல்கள் போல் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.   நூலகங்களில் ஆயிரக்கணக்கில் நூல்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன.   இன்று இலக்கியம் அபரிதமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. எது சிறந்த இலக்கியம் ?   எதைப் படிக்க வேண்டும் ?   என்கின்ற கேள்வி எழுகிறது.     “ உன்னுடைய இலக்கியத்தை குறைந்தது ஒன்பதாண்டுகளுக்கு மக்கள் முன் வை ,   அதன்பிறகும் மக்கள் அதனை விரும்பிப் படிப்பார்களேயானால் ,   அது சிரஞ்சீவி இலக்கியம் ஆகும் ”   என்று அறிஞர் ஒருவர் கூறுகிறார். அப்படியெனில் ,   பழந்தமிழ் இலக்கியங்கள் யாவும் சிரஞ்சீவி இலக்கியங்களே.    “ வாழ்க்கை முறையை எடுத்துக் காட்டுவதுதான் இலக்கியம் ”   என்று ஆங்கில அறிஞர் அட்சன் கூறியிருக்கிறார்.       தன்னுடைய நோய் எது ?    அதற்கு ஏற்ற மருந்து எது ?   என்று மருத்துவரை நாடிச் சென்று அவர் ஆலேசனையின்படி மருந்து உண்டால்தான் அது ப...

எவர் பார்வை எப்படி இருக்கும்?

Image
( தமிழச்சி , 2010   ஜ ø லை இதழில்   வெளிவந்த   எனது   கட்டுரை )                40   பக்கங்கள் கொண்ட ஒரு புதிய மாத இதழ். விலையோ ரூ. 20.   பல வண்ணங்களில் நல்ல தாளில் அச்சிடப்பட்டி ருக்கிறது.   இவ்விதழை பலரிடம் கொடுத்து ,    “ இவ்விதழ் எப்படி உள்ளது ? ”   என்று கருத்து கேட்கப்பட்டது.     அவர்களில் முதல் நபர் ,  “ எழுத்தின் அளவை இன்னும் ஒரு புள்ளி கூட்டியிருந்தால் படிப்பதற்கு நன்றாக இருந்திருக்கும் ”   என்கிறார்.   இரண்டாம் நபர் ,  “ 40   பக்கம்தான் இருக்கிறது.   இதற்குப்போய்   20   ரூபாய் கொடுப்பதா ? ”   என்கிறார்.     மூன்றாம் நபர் ,  “ இப்படி ஒரு அருமையான இதழை நான் இதுவரை கண்டதே இல்லை.   ஒவ்வொரு பக்கத்திலும் பயனுள்ள செய்திகள்.   இவ்வளவு அருமையான இதழ் இருபது ரூபாய்க்குக் கிடைக்கிறது என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது ”   என்கிறார்.   நான்காம் நபர் ,  “ இவ்விதழில் உள்ள புகைப்...

ஒருவர் எத்துறையில் சாதனைபுரிய முடியும்?

Image
( தமிழச்சி , 2010 செப்டம்பர்  இதழில்  வெளிவந்த  எனது கட்டுரை)            ஒவ்வொரு மனிதரும் பிறந்தோம், வாழ்ந்தோம் என்று இருக்கக் கூடாது. இவ்வுலகில் நாம் மனிதனாகப் பிறந்ததற்கு ஏதாவது ஒரு அடையாளத்தை விட்டுச்செல்ல வேண்டும்.          ஒவ்வொரு மனிதரிடமும் ஏதாவது ஒரு தனித்திறமை இருக்கிறது. அதை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும்.  “எனக்கு எந்தத் திறமையும் இல்லை” என்று எவரும் சொல்லிவிட முடியாது. சாதிக்க எந்தத் துறையை தேர்வு செய்வது என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம். அப்படி நாம் குழம்பத் தேவையில்லை.      நாம் அன்றாடம் செய்யும் பணியையே புதுமையாக, ஆக்கப்பூர்வமாக, திறம்படச் செய்தாலே அது சாதனையாகிவிடும். இப்படித்தான் பலரும் சாதனைபுரிந்து வருகின்றனர்.     சாதாரண சவரத் தொழிலாளிகூட உலக சாதனை செய்துள்ளதாக பத்ரிகைகளில் படித்திருக்கிறோம். அவர் செய்ததும் அவர் அன்றாடம் செய்யும் வேலையே. அவர் ஒரு மணி நேரத்தில் 150 பேருக்கு முகச்சவரம் (சேவிங்) செய்து சாதனை படைத்துள்ளார்.     ...

சொல் சிக்கனம் எங்கு தேவை?

Image
( தமிழச்சி , 2010 அக்டோபர் இதழில் வெளிவந்த எனது கட்டுரை)               மற்றவர்களுக்குத் தகவல்களைத் தெரிவிக்கும்போதும், நம் எண்ணங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளும்போதும், சூழ்நிலை அறிந்து சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.           மேடையில் பேசும்போது சுருக்கமாக பேசி, சொல்லவேண்டிய கருத்தைத் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.  கேட்பவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காக சொல்ல வேண்டிய கருத்தை  தேவையில்லாமல் விவரித்துக் கொண்டிருக்கக்கூடாது. அவ்வாறு பேசிக்கொண்டிருந்தால் அது கேட்பவர்களுக்கு சளிப்பை ஏற்படுத்திவிடும்.  இவர் எப்பொழுது முடிப்பார்? என்று நினைப்பார்கள்.          குறைந்த சொற்களைப் பயன்படுத்தி, பார்வையாளர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும்.  இன்னும் கொஞ்ச நேரம் பேசமாட்டாரா? என்கின்ற எதிர்பார்ப்பை உண்டாக்கும் அளவிற்கு சொல் சிக்கனம் தேவை.    இன்று தொலைபேசிக் கட்டணங்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. இதனால், தொலைபேசியில் பேசும் பலர் கால் மணிநேரம் ஆனாலும் பேசி முடிப்பதில்லை. ...

யார் நல்ல நண்பன்?

Image
Saravanan. C   இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்பவனை நல்ல நண்பன் என்கிறோம்.  ஆனால் , நல்ல நண்பனுக்கு அழகு அது மட்டுமா ?    ஒருவன் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டி அவனை நல்வழிக்கு இட்டுச் செல்பவனே நல்ல நண்பன்.     ஆனால் , இன்று அப்படிப்பட்ட நல்ல நண்பர்களைப் பார்க்க முடிகிறதா ? அது சாத்தியமா ?   தான் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டுபவனை எவரும் நண்பனாகவே ஏற்றுக் கொள்வதில்லை.      “ நான் செய்வதைத் தவறு என்று சொல்கின்றாயே , நீயெல்லாம் ஒரு நண்பனா ? ” என்றல்லவா கேட்கிறார்கள்.   தான் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட் டா மல் , அதற்கு நியாயம் பேசுபவர்களைத்தான் நல்ல நண்பன் என்று பலரும் கொண்டாடுகின்றனர்.     அதனால்தான் , ஒருவர் தவறான பாதையில் சென்றாலும் , அவருடன் உள்ள நண்பர்கள் அவரது குறைகளையும் தவறுகளையும் சுட்டிக் காட்டுவதில்லை.  நல்லது சொல்லப்போய் ஏன் கெட்டப் பெயர் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஒதுங்கிக் கொள்கிறனர்.     எல்லாம் முடிந்த பிறகுதான் சொல்லுவார்கள் , “ அடடா , நீயாவது சொல...

மகாகவி பாரதியாருக்கு உரிய கௌரவம் கிடைக்காமல் போனது ஏன்?

Image
( அன்பு பாலம்  - ஜனவரி 2011 பொங்கல் சிறப்பிதழில் வெளிவந்த எனது கட்டுரை)   மகாகவி பாரதியாரைப் போன்ற மிகப்பெரிய கவிஞரும் சமூக சீர்திருத்தவாதியும், சுதந்திரப் போராட்ட வீரரும் பாரதத்தில் பிறந்ததில்லை.     இலக்கியம், சுதந்திரப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு, சமூக சீர்திருத்தம் ஆகியவற்றிற்காக அவர் ஆற்றியுள்ள மிகப்பெரிய பங்களிப்பை எவரும் மறந்துவிட முடியாது.      அப்படி இருந்தும் அவருக்குக் கிடைக்க வேண்டிய பேரும் புகழும் கிடைத்ததா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஒரு பார்ப்பனர் குடும்பத்தில் பிறந்தவர் என்பதாலும் அவருடைய படைப்புகள் ஆங்கிலத்திலும், பிறமொழிகளிலும் மொழி பெயர்க்கப்படாததாலும் தான் அவருக்குக் கிடைக்க வேண்டிய கௌரவம் கிடைக்காமல் போய்விட்டது.        வங்க மொழியில் சிறந்த கவிஞராகக் கருதப்படும் இரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளுக்காக அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.    இந்தியர் ஒருவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது மகிழ்ச்சியான ஒன்றுதான். அதே நேரத்தில் பாரதியாரின் படை...

புத்தக காப்பகமா நூலகங்கள்?

Image
(19.3.2018 அன்று தினத்தந்தியில்  வெளிவந்த எனது கட்டுரை)      இந்தியாவிலேயே முதன்முதலாக நூலகச் சட்டம் இயற்றிய மாநிலம் என்கின்ற பெருமை தமிழகத்தைச் சாரும். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய நூலகத்தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பெரும் முயற்சியால் இச்சட்டம் இயற்றப்பட்டது.       இச்சட்டத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் தாங்கள் வசூல் செய்யும் சொத்து வரியில் பத்து சதவீதம் நூலக வரியாக வசூலித்து நூலகத்துறைக்குக் கொடுக்கின்றன. இந்நிதிதான் பொதுநூலகத்துறையின் முக்கிய வருவாயாகும்.      தமிழகத்தில் பொது நூலகத்துறையின் கீழ் கன்னிமரா பொது நூலகம் , அண்ணா நூற்றாண்டு நூலகம் , 32 மாவட்ட மைய நூலகங்கள் , 1926 கிளை நூலகங்கள் , 1914 ஊர்ப்புற நூலகங்கள் , 715 பகுதிநேர நூலகங்கள் , 14 நடமாடும் நூலகங்கள் என்று 4603 நூலகங்கள் இயங்கி வருகின்றன.       வாசகர்களுக்கு நூல்களை இரவலாக வழங்குவது , வாசகர்கள் கலந்தறிய விரும்பும் நூல்களை வழங்குவது , ஒலி ஒளி மூலம் வாசகர்களுக்கு தகவல்களை அளித்தல் , பள்ளிகளுடன் இணைந்து நூலகச் சேவையை வழங்குவது...