ஒரு நூலகரின் டைரி குறிப்புகள் - பாகம் 2. 1.மரபு மீறப்படுகிறதா?
பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் மரபு திடீரென்று மீறப்பட்டால், அதில் ஏதேனும் உள்நோக்கம் உண்டோ? என்கின்ற சந்தேகம் வருவது இயல்பு. தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் 17.11.2018 அன்று நடைபெற்ற நூலக வார விழாவில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த மரபு மீறப்பட்டுள்ளதாக நூலக நண்பர்கள் பலர் என்னிடம் கூறி வருத்தப்பட்டனர். இந்தச் செயல் எதிர்காலத்தில் ஒரு தவறான முன் உதாரணமாக ஆகி விடும் என்ற அச்சத்தையும் நண்பர்கள் என்னிடம் வெளிப்படுத்தினர். சிறப்பாகச் செயல்படும் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படுவது வழக்கம். ஆசிரியர்களுக்குத் தேசிய அளவிலும் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படுகிறது. மாநில அளவில் அளிக்கப்பட்ட விருதுகள், மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட அலுவலரிடம் கொடுத்து வாழ்த்து பெறுவது என்பது எல்லாத் துறையிலும் நடக்கும் சம்பிரதாய நிகழ்வு. நூலகத் துறையில் சிறப்பாகப் பணிபுரியும் நூலகர்களுக்கு வழங்கப்படும் நல்நூலகர் விருது மாநில அளவில் சென்னையில் நடைபெறும் விழாவில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது. மாவட்...