Posts

Showing posts from December, 2023

ஜெயகாந்தனின் 'பிரளயம்' என்ன சொல்கிறது?

Image
     எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய பிரளயம் என்னும் இந்த நூலை கடந்த வாரம் வாசித்தேன் . இந்தக் கதையில் , சென்னையில் ஆற்றங்கரை ஓரமாக குடிசைகள் போட்டு வாழ்ந்து வரும் கீழ்த்தட்டு மக்களின் சராசரி வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டுகிறார் ஜெயகாந்தன் . கதையின் நாயகி பாப்பாத்தி , அழகப்பர் வீட்டில் வேலைக்காரியாக வேலை செய்கிறாள் .  அழகப்பர் மகன் செல்வத்துடன்  நெருக்கமாக இருக்கிறாள் .  அவளுக்கும்  ரிக்ஷா ஒட்டும் தீனனுக்கும் திருமணம் நடைபெறுகிறது .  திருமணம் முடிந்த அடுத்த நாள் வழக்கம்போல, அழகப்பர் வீட்டிற்கு வேலை க்கு ப் போகிறாள் .  செல்வத்தைச் சந்தித்து , " உங்களுக்குத் திருமணம் நடைபெறும் வரை நான் இங்கு வேலைக்கு வரமாட்டேன் " என்று கூறிவிட்டு வந்து விடுகிறாள் . பக்கிரி ஜெயிலுக்கு போய் மூன்று வருடம் கழித்து வருகிறான் . தன் மனைவி பச்சியம்மாளும்  குழந்தையும் சாப்பாட்டுக்கு என்ன செய்திருப்பார்களோ என்று வேதனைப்படுகிறான் . இவன் மனைவி மாணிக்கத்தோடு வாழ்வதாகக் கேள்விப்படுகிறான் ....

சாதி வாரி கணக்கெடுப்பு – மக்களை முட்டாள் ஆக்கும் வேலையா?

       பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, முடிவுகளை வெளியிட்டார் அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார். இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புள்ளி விவரங்களின்படி , அம்மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36.01 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.12 சதவீதமும், பட்டியல் இனத்தினர் 19.65 சதவீதமும், இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர் 15.52 சதவீதமும், பட்டியல் பழங்குடியின மக்கள் 1.68 சதவீதமும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.      இந்த கணக்கைப் பார்த்தால், பழைய கணக்கின் சதவிகிதம் சில மாறி இருக்கிறது அவ்வளவுதான். இந்த சதவிகிதத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடப்போவதாக கூறுகிறார் நிதிஷ்குமார்.      பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ், நிதீஷ்குமார் ஆகியோர் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக பிகாரில் ஆட்சி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  இந்த 33 ஆண்டுகளில் இந்த மக்களின் வாழ்வாதாரத்தை லாலுவும் திதிஷ்குமாரும் ஏன் மேம்...