சாந்திக்கு மறு பெயர் காந்தி!
சாந்திக்கு மறுபெயர் காந்தி! மகாத்மா காந்தி , இந்திய சுதந்திரப் போரட்டத்தில் மக்களைத்திரட்டி , அகிம்சை முறையில் ‘ வெள்ளையனே வெளியேறு ’ என்று பேராடிக்கொண்டிருந்தார். மக்களின் எழுச்சிமிக்கப் போராட்டதை ஆங்கிலேய ஆட்சியாளர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அப்போது , பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அன்றைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்: “ இந்த காந்திஜி , துப்பாக்கி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டால் , பீரங்கியால் நசுக்கி இருப்பேன். பீரங்கி எடுத்து போராடி இருந்தால் , விமானம் மூலம் அழித்து இருப்பேன். ஆனால் , அவரோ , ஆயுதங்களைப் புறக்கணித்து அகிம்சை , சத்தியம் போன்றவைகளை ஆயுதங்களாகக் கொண்டு போராடியதால் , இதனை வெல்ல உலகில் வேறு ஆயுதம் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால் , அவரை வெற்றி கொள்ள இயலாமல் பணிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது ”. ‘ பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் சூரியன் ஒருபோதும் மறையாது (The sun never sets on the British Empire)’ என்று இறுமாப்புடன் ஆட்சி புரிந்துவந்த பிரிட்டிஷ் அரசின் பிரத...