தருமபுரி மாவட்ட புத்தக ஆர்வலர்கள், படைப்பாளர்கள், பதிப்பாளர்கள் கவனத்திற்கு:-
தருமபுரி மாவட்ட புத்தக ஆர்வலர்கள், படைப்பாளர்கள், பதிப்பாளர்கள் ஆகியோருக்கு நூலகர் சி.சரவணன் எழுதும் மடல். வணக்கம். தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் புத்தகத்திருவிழா தொடர்பான செய்திகளை செய்தித்தாள்களில் படிக்கும்போதெல்லாம், தருமபுரியில் அப்படிப்பட்ட புத்தகத் திருவிழா நடக்காதா என்று நம்மில் பலரும் ஏங்கியிருக்கிறோம். அந்த ஏக்கம் அண்மையில் நடந்து முடிந்த புத்தகத்திருவிழா மூலம் நிறைவேறியுள்ளது. இந்த புத்தகத்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்த மருத்துவர் இரா.செந்தில், தோழர் சிசுபாலன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியையும், வாழ்த்துகளையும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். புத்தகத்திருவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள இந்த நேரத்தில், என் மனதில் பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த மனக்குறை ஒன்றைப் பற்றியும் உங்கள் முன் விவாதப் பொருளாக முன்வைக்க விரும்புகிறேன். தருமபுரி மாவட்டத்தில் எத்தனை பதிப்பகங்கள் உள்ளன? அவை பதிப்பித்த பழைய நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளனவா? மாவட்டத்தில் எத்தனை எழுத்தாளர்கள் உள்ளனர்? எத்தனை கவிஞர்கள் உள்ளனர்? எந்தெந்த கவிஞரின் கவிதைகள் எந்தெந்த இதழ்களில் வெளிவந்...