Posts

Showing posts from March, 2023

அதிகரித்து வரும் ஆசிரியர்கள் மீதான தாக்குதல்கள் - தீர்வு என்ன?

நூலகர் சி. சரவணன். அண்மைக்காலமாக ஆசிரியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால், ஆசிரியர்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். ஆசிரியர்களின் மனக்குமுறல்களை சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது. மருத்துவர்களைப்போல,  ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் சட்டம் இயற்ற வேண்டும் என்று கூட ஆசிரியர்கள் சிலர் பதிவு போடுகிறார்கள். அந்த பதிவுக்கு ஆசிரியர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது.  இன்றைக்கு ஆசிரியர்கள் மட்டும் இது போன்ற தாக்குதல்களை சந்தித்து வருகிறார்கள் என்று இல்லை.  அனைத்து துறை அரசு ஊழியர்களும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், மற்ற துறை அரசு ஊழியர்கள் அதை  எளிதாக எதிர்கொள்கிறார்கள். 'அரசு ஊழியர் சங்கம்' ஊழியர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. அறநிலையத்துறை அலுவலர் ஒருவர் தாக்கப்படபோது, அரசு ஊழியர் சங்கம் பிரச்சினையை கையில் எடுத்தது. தாக்குதலில் தொடர்பு உடையவராக சொல்லப்பட்ட  அமைச்சர் ஒருவரின் பதவி பறிபோனது. பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை வந்தபோது, அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர்...

நூலகர்களுக்கு பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவை.

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, அமேசான் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, அமேசான் கிண்டிலில் உள்ள 10 லட்சம் நூல்களை இனி அரசு பொது நூலகங்களில் அமர்ந்தபடி படிக்க முடியும்.      டிஜிட்டல் தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கில், 10 ஆயிரம் புத்தகங்கள் கணினியில் பிடிஃஎப் வடிவில் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. மேலும் 8 ஆயிரத்திற்கும் அதிகமான இ-பருவ இதழ்கள் கணினி டெஸ்க்டாப்பில் படிக்கக் கூடிய வசதியும் உருவாக்கித் தந்துள்ளனர். tamilnadupubliclibraries.org என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து, Digital Library மூலம் அமேசான் கிண்டில் பக்கத்திற்கான வசதியைப் பெறலாம். மின்னூலாக்கத்தில் magsters என்ற வாசிப்புத் தளமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில்தான் நாளேடுகள், மாத இதழ்கள் எனப் பலவற்றையும் நாம் படிக்க முடியும்.     இந்த  திட்டத்திற்காகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள 500 பொது நூலகங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படுத்தப்பட உள்ளது. அதில் தற்போது முதல் கட்டமாக 140 நூலகங்களில் மின்நூலக சேவை தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள், மாணவர்கள், வேலை தேட...