Posts

Showing posts from April, 2020

கரோனா: இந்தியாவில் தனிநபர் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது ஏன்?

கரோனா வைரஸ் நோயால் இந்தியாவில் தனிநபர் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.  2008 - 09 ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி அடைந்த போது, உலக நாடுகள் எல்லாம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தன.   வல்லரசு நாடுகளெல்லாம் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியடைந்து, மீள முடியாத் துயரத்தில் ஆழ்ந்தன.  பல நாடுகளில் வங்கிகள் பலவும் திவால் ஆகின.  வல்லரசு நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் வங்கிகளில் கடன் வழங்கி வீடு வாங்கியவர்களால்  தவணைத் தொகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் வங்கிகளில் கடன் பெற்று வீடு வாங்கியவர்கள் தங்களுக்கு வீடு வேண்டாம் என்றனர். அதனால்,  வங்கிகள் அந்த வீடுகளைக் கையகப்படுத்தி ஏலம் விட்டன.  ஏலத்தில் வீடுகள் வாங்க யாரும் முன்வரவில்லை.   கையகப்படுத்திய வீடுகளை விற்க முடியாமல் வங்கிகள் தடுமாறின. இதனால், வங்கியில்  முதலீடு செய்தவர்களுக்கு வங்கிகள் பணம் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. அமெரிக்காவில் வங்கிகள் திவால் ஆவதைத் தவிர்க்க அந்த நாட்டு மத்திய வங்கியான அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, நலிவுற்ற வங்கி...

கரோனா: பட்டினிச் சாவைத் தவிர்க்க...

Image
"இந்தியாவில் இரண்டு இந்தியா இருக்கிறது" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.கபில் சிபல் கூறினார்.   "ஊரடங்கு நாட்களில் வீடுகளில் தங்கி, தொலைக்காட்சியிலும்  அலைபேசியிலும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டும், சுவையான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டும் இருக்கிறவர்கள் ஒரு வகை இந்திய மக்கள்; சாலை ஓரங்களில் தங்கிக்கொண்டு,  உண்ண உணவு இல்லாமல், யாராவது ஏதாவது கொடுப்பார்களா? என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறவர்கள் இன்னொரு வகை இந்தியர்கள்" என்றார் திரு. கபில் சிபல்.   'மத்திய பெண் அமைச்சர் ஒருவர் ஊரடங்கு நாளில் இணைய வழியில் பாட்டுப் போட்டி நடத்தியதை விமர்சனம் செய்யவே திரு. கபில் சிபல் இவ்வாறு குறிப்பிட்டார்' என்று பத்திரிகைகள் எழுதின. அவர் சொன்னதை அரசியலாக மட்டும் பார்க்காமல்,  அதில் உள்ள உண்மை என்ன என்று சமூகப் பார்வையில் பார்க்க வேண்டும். திடீரென ஊரடங்கு அறிவிக்கப் பட்டதால் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (stranded workers) சொந்த மாநிலத்துக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி விட்டார்கள்.  இவர்கள் உண்ண உணவு இல்லாமல், தங்க இடம் இல்லாமல் ஆ...

கரோனா: இயற்கைச் சீற்றமா? இறைவன் சீற்றமா?

Image
கரோனோ வைரஸ் நோயால் உலக மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  இது தொடர்பான பல்வேறு கருத்துக்கள், பல்வேறுபட்ட மக்களிடம் இருந்து வந்துகொண்டு இருக்கின்றன.  இயற்கைக்கு விரோதமாக மக்கள் நடந்து கொள்வதால்தான் இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படுகின்றன என்று பரவலாக பேசப்படுகிறது.  அதிக அளவில் இயற்கை வளங்களைச் சுரண்டுவதும், அதிக அளவில் சுற்றுச்சூழலை கெடுப்பதும், லட்சக்கணக்கான விமானங்களை தினமும் வானில் செலுத்தி வளி மண்டலத்தின் தூய்மையைக் எடுப்பதும், புவியை வெப்பமயமாக்கச் செய்வதும், ஓசோன் படலத்தை சிதைப்பதும் இயற்கை விரோதச் செயல்களாகும்.   இதுபோன்ற செயல்கள் தான் மனிதனுக்கு கரோனா வைரஸ் நோய் ஏற்படக் காரணம் என்று பலரால் சொல்லப்படுகிறது.   ஆனால், இதுபோன்ற இயற்கைக்குப் புறம்பான மக்களின் செயல்கள்தான் வைரஸ் நோய் தோன்றக் காரணம் என்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை.  இருந்த போதிலும் பெரும்பாலான மக்கள் திரும்பத் திரும்ப இதையே தான் கூறி வருகின்றனர். அதற்குக் காரணம் உலகில் எந்த ஒரு பகுதியில் எந்த ஒரு பேரழிவு ஏற்பட்டாலும் இயற்கை வளங்கள் அழிப்பு தான் கார...

இனி என்ன செய்ய வேண்டும்?

Image
கண்ணுக்குப் புலப்படாத கொடிய வைரஸ் வல்லரசு நாடுகளையெல்லாம் தாக்கி, அவர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஆயிரம் பேர் இந்த நோய்க்கு இறக்கிறார்கள்.  இதைக் கண்ட உலக மக்கள் அனைவரும் இன்று அச்சத்தில் மூழ்கி இருக்கிறார்கள். உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து, மக்களை வீடுகளிலே இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.   இந்தியாவும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்களை வீட்டிற்குள்ளே இருக்குமாறும், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியில் வருமாறும், அப்படி வெளியில் வந்தாலும் கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது. சீன நாட்டில் தொடங்கிய வைரஸ் நோய்,  மெல்ல ஐரோப்பிய நாடுகளில் பரவி, அதிக அளவிலான உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில். அதைக் கண்ட சில நாடுகள் தங்கள் மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதையும், வெளிநாட்டுப் பயணிகளை உள்நாட்டில் அனுமதிப்பதிலும் கட்டுப்பாடுகளை விதித்தன.  ஆனால், உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய நாடான இந்தியாவில் அப...

மாண்புமிகு மக்களே!

Image
இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு மருத்துவர்களும், மருத்துவ, துப்புரவு பணியாளர்களும் கடவுள்களாகத் தெரிகிறார்கள்.  பாரதப்பிரதமர் ஒருநாள் அடையாள ஊரடங்கு உத்தரவை அறிவித்தபோது, 'ஊரடங்கு நாளன்று மாலை 5 மணிக்கு நாட்டில் உள்ள அனைவரும் மருத்துவர்களின் சேவையைப் போற்றும் வகையில் அவர்களுக்கு கைதட்டி ஆரவாரம் செய்து நன்றியை தெரிவிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.  நாட்டில் பல பகுதிகளிலிருந்து இதுபோன்ற கைதட்டல் செய்திகள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் காண முடிந்தது.   தமிழ்நாடு அரசு முதலமைச்சர், ஒருபடி மேலே சென்று, "மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் கடவுள்களைப் போன்றவர்கள்" என்று சட்டமன்றத்திலேயே பேசினார்.   "வழிபாட்டுத் தளங்கள் எல்லாம் மூடப்பட்டு விட்டன; கடவுள்கள் எல்லோரும் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்கள்" என்று முகநூல் பதிவுகளில் பலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.  இந்த பதிவுக்கு இரண்டு பொருள் உண்டு.  ஒன்று, கடவுள்களை நம்புவர்களை விமர்சனம் செய்வது; மற்றொன்று, மருத்துவர்களை கடவுள்களாக பார்ப்பது...

இனி எது வல்லரசு நாடு?

Image
நான் தான் உலகின் பெரிய வல்லரசு என்று அமெரிக்காவும், சீனாவும் போட்டிப் போட்டுக் கொண்டு உலக மக்களை அச்சத்தில் வைத்துக் கொண்டு இருந்தன. பல நாடுகளை எவ்வாறு அடக்கி அடிமைகளாக வைத்து இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அடிபணியாத நாடுகளுக்கு எப்படி எல்லாம் பொருளாதார தடை விதித்தார்கள் என்பதை மறக்க முடியுமா? சிலர் கடவுளைக் காட்டிலும், அறிவியல் தான் பெரியது என்று கூறிக் கொண்டு வந்தனர். ஆனால், இன்று கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி இந்த வல்லரசுகளை, அறிவியல் வல்லுனர்களை  தலை குனிய வைத்துவிட்டதே?   ஆயுதப் படையைக் காட்டியும், நவீன கண்டுபிடிப்புகளைக் காட்டியும், வல்லரசு என்று உலக மக்களை அச்சுறுத்தி  வந்த சீனா, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் இன்று கண்ணுக்குப் புலப்படாத ஒரு கிருமி முன்பு கைகட்டி, மண்டியிட்டு, "தயவு செய்து எங்களை வாழ" விடு என்று மன்றாடி வேண்டிக் கொண்டு இருக்கின்றனவே? ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அணுகுண்டுகளை வீசி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த அமெரிக்கா, அந்த மக்களின் துயரங்களை இன்றாவது ...