Posts

Showing posts from 2020

மெல்ல மெல்ல தமிழ் இனி வாழும்.

Image
( இளந்தமிழர் பேரவைை- நடத்திய பன்னாட்டுக் கலைத் திருவிழா போட்டிகளில் 18 முதல் 30 வயதினருக்கான கட்டுரைப் போட்டியில் எங்கள் மகள் ச.கோவரசி எழுதிய *' மெல்ல மெல்ல தமிழ் இனி வாழும்' இந்தக் கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.) மெல்ல மெல்ல தமிழ் இனி வாழும். ச.கோவரசி,  (த/பெ. சி.சரவணன்) மூன்றாம் ஆண்டு - இளநிலை வேளாண்மை வாணவராயர் வேளாண்மை கல்லூரி _ பொள்ளாச்சி, வீட்டு முகவரி : 1/47 பி, இந்திரா நகர், கடத்தூர், தருமபுரி- 6353 03 முன்னுரை : மெல்ல தமிழினிச் சாகும் – என சொல்லக் கேட்கும் மனங்கள் வேகும். அவ்வாறு வெந்து போகின்ற மனங்களில் என் மனமும் ஒன்று. பல்வேறு காலங்களிலும் பல்வேறு இடர்களிலும் நாம் எண்ணிலடங்காதவற்றை இழந்திருக்கிறோம். அவை அனைத்தையும் தாண்டி நின்ற தமிழ் தம்முள் பல்வேறு இழப்புகளையும் சந்தித்திருக்கிறது. ஒரு குடிசை எரிந்து விட்டால் ஓர் ஊரே அழிந்துவிடும் எனச் சொல்வது ஏற்கத்தக்கது அன்று. அவ்வாறு தான் தமிழும். வெல்லும் தமிழ், இனி எவ்வாறு மெல்ல மெல்ல வாழும் என்பதைக் காண்போம். பொய் என்னும் காட்டுத் தீ  எதிர்மறையான கருத்துகளைப் பேசியே பழக்கப்பட்டு விட்ட சமூகம் இது. அவ்வாறு தான் தமிழ் ...

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும்.

அரசு ஊழியர் பணி ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு சிலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.  ஓய்வு பெறும் வயது ஓராண்டு உயர்த்தப்படுவதாகக் கூறும் அரசாணையில், அதிகபட்ச பணி ஆண்டுகள் பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லை.  இது தான் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும் என்று சிலர் கூறுவதற்குக் காரணம். இந்த ஆண்டு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற இருப்பதால் அவர்களுக்கு சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என்பதாலும்,  கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இவ்வளவு பெரிய தொகை ஒதுக்க இயலாது என்பதாலும் அரசு இந்த முடிவை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எது எப்படி இருப்பினும்,  பங்களிப்பு ஊதியத் திட்டத்தில் (CPS) இருக்கும்  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் இந்த அறிவிப்பை வரவேற்கின்றனர்.    ஏப்ரல் 2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்று அரசு அறிவித்து விட்டது.  இந்த நிலையில் 2003க்குப் பிறகு பணியில் சேர்ந்து ஓய்வு பெற...

கரோனா: இந்தியாவில் தனிநபர் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது ஏன்?

கரோனா வைரஸ் நோயால் இந்தியாவில் தனிநபர் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.  2008 - 09 ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி அடைந்த போது, உலக நாடுகள் எல்லாம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தன.   வல்லரசு நாடுகளெல்லாம் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியடைந்து, மீள முடியாத் துயரத்தில் ஆழ்ந்தன.  பல நாடுகளில் வங்கிகள் பலவும் திவால் ஆகின.  வல்லரசு நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் வங்கிகளில் கடன் வழங்கி வீடு வாங்கியவர்களால்  தவணைத் தொகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் வங்கிகளில் கடன் பெற்று வீடு வாங்கியவர்கள் தங்களுக்கு வீடு வேண்டாம் என்றனர். அதனால்,  வங்கிகள் அந்த வீடுகளைக் கையகப்படுத்தி ஏலம் விட்டன.  ஏலத்தில் வீடுகள் வாங்க யாரும் முன்வரவில்லை.   கையகப்படுத்திய வீடுகளை விற்க முடியாமல் வங்கிகள் தடுமாறின. இதனால், வங்கியில்  முதலீடு செய்தவர்களுக்கு வங்கிகள் பணம் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. அமெரிக்காவில் வங்கிகள் திவால் ஆவதைத் தவிர்க்க அந்த நாட்டு மத்திய வங்கியான அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, நலிவுற்ற வங்கி...

கரோனா: பட்டினிச் சாவைத் தவிர்க்க...

Image
"இந்தியாவில் இரண்டு இந்தியா இருக்கிறது" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.கபில் சிபல் கூறினார்.   "ஊரடங்கு நாட்களில் வீடுகளில் தங்கி, தொலைக்காட்சியிலும்  அலைபேசியிலும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டும், சுவையான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டும் இருக்கிறவர்கள் ஒரு வகை இந்திய மக்கள்; சாலை ஓரங்களில் தங்கிக்கொண்டு,  உண்ண உணவு இல்லாமல், யாராவது ஏதாவது கொடுப்பார்களா? என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறவர்கள் இன்னொரு வகை இந்தியர்கள்" என்றார் திரு. கபில் சிபல்.   'மத்திய பெண் அமைச்சர் ஒருவர் ஊரடங்கு நாளில் இணைய வழியில் பாட்டுப் போட்டி நடத்தியதை விமர்சனம் செய்யவே திரு. கபில் சிபல் இவ்வாறு குறிப்பிட்டார்' என்று பத்திரிகைகள் எழுதின. அவர் சொன்னதை அரசியலாக மட்டும் பார்க்காமல்,  அதில் உள்ள உண்மை என்ன என்று சமூகப் பார்வையில் பார்க்க வேண்டும். திடீரென ஊரடங்கு அறிவிக்கப் பட்டதால் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (stranded workers) சொந்த மாநிலத்துக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி விட்டார்கள்.  இவர்கள் உண்ண உணவு இல்லாமல், தங்க இடம் இல்லாமல் ஆ...

கரோனா: இயற்கைச் சீற்றமா? இறைவன் சீற்றமா?

Image
கரோனோ வைரஸ் நோயால் உலக மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  இது தொடர்பான பல்வேறு கருத்துக்கள், பல்வேறுபட்ட மக்களிடம் இருந்து வந்துகொண்டு இருக்கின்றன.  இயற்கைக்கு விரோதமாக மக்கள் நடந்து கொள்வதால்தான் இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படுகின்றன என்று பரவலாக பேசப்படுகிறது.  அதிக அளவில் இயற்கை வளங்களைச் சுரண்டுவதும், அதிக அளவில் சுற்றுச்சூழலை கெடுப்பதும், லட்சக்கணக்கான விமானங்களை தினமும் வானில் செலுத்தி வளி மண்டலத்தின் தூய்மையைக் எடுப்பதும், புவியை வெப்பமயமாக்கச் செய்வதும், ஓசோன் படலத்தை சிதைப்பதும் இயற்கை விரோதச் செயல்களாகும்.   இதுபோன்ற செயல்கள் தான் மனிதனுக்கு கரோனா வைரஸ் நோய் ஏற்படக் காரணம் என்று பலரால் சொல்லப்படுகிறது.   ஆனால், இதுபோன்ற இயற்கைக்குப் புறம்பான மக்களின் செயல்கள்தான் வைரஸ் நோய் தோன்றக் காரணம் என்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை.  இருந்த போதிலும் பெரும்பாலான மக்கள் திரும்பத் திரும்ப இதையே தான் கூறி வருகின்றனர். அதற்குக் காரணம் உலகில் எந்த ஒரு பகுதியில் எந்த ஒரு பேரழிவு ஏற்பட்டாலும் இயற்கை வளங்கள் அழிப்பு தான் கார...

இனி என்ன செய்ய வேண்டும்?

Image
கண்ணுக்குப் புலப்படாத கொடிய வைரஸ் வல்லரசு நாடுகளையெல்லாம் தாக்கி, அவர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஆயிரம் பேர் இந்த நோய்க்கு இறக்கிறார்கள்.  இதைக் கண்ட உலக மக்கள் அனைவரும் இன்று அச்சத்தில் மூழ்கி இருக்கிறார்கள். உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து, மக்களை வீடுகளிலே இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.   இந்தியாவும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்களை வீட்டிற்குள்ளே இருக்குமாறும், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியில் வருமாறும், அப்படி வெளியில் வந்தாலும் கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது. சீன நாட்டில் தொடங்கிய வைரஸ் நோய்,  மெல்ல ஐரோப்பிய நாடுகளில் பரவி, அதிக அளவிலான உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில். அதைக் கண்ட சில நாடுகள் தங்கள் மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதையும், வெளிநாட்டுப் பயணிகளை உள்நாட்டில் அனுமதிப்பதிலும் கட்டுப்பாடுகளை விதித்தன.  ஆனால், உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய நாடான இந்தியாவில் அப...

மாண்புமிகு மக்களே!

Image
இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு மருத்துவர்களும், மருத்துவ, துப்புரவு பணியாளர்களும் கடவுள்களாகத் தெரிகிறார்கள்.  பாரதப்பிரதமர் ஒருநாள் அடையாள ஊரடங்கு உத்தரவை அறிவித்தபோது, 'ஊரடங்கு நாளன்று மாலை 5 மணிக்கு நாட்டில் உள்ள அனைவரும் மருத்துவர்களின் சேவையைப் போற்றும் வகையில் அவர்களுக்கு கைதட்டி ஆரவாரம் செய்து நன்றியை தெரிவிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.  நாட்டில் பல பகுதிகளிலிருந்து இதுபோன்ற கைதட்டல் செய்திகள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் காண முடிந்தது.   தமிழ்நாடு அரசு முதலமைச்சர், ஒருபடி மேலே சென்று, "மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் கடவுள்களைப் போன்றவர்கள்" என்று சட்டமன்றத்திலேயே பேசினார்.   "வழிபாட்டுத் தளங்கள் எல்லாம் மூடப்பட்டு விட்டன; கடவுள்கள் எல்லோரும் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்கள்" என்று முகநூல் பதிவுகளில் பலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.  இந்த பதிவுக்கு இரண்டு பொருள் உண்டு.  ஒன்று, கடவுள்களை நம்புவர்களை விமர்சனம் செய்வது; மற்றொன்று, மருத்துவர்களை கடவுள்களாக பார்ப்பது...

இனி எது வல்லரசு நாடு?

Image
நான் தான் உலகின் பெரிய வல்லரசு என்று அமெரிக்காவும், சீனாவும் போட்டிப் போட்டுக் கொண்டு உலக மக்களை அச்சத்தில் வைத்துக் கொண்டு இருந்தன. பல நாடுகளை எவ்வாறு அடக்கி அடிமைகளாக வைத்து இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அடிபணியாத நாடுகளுக்கு எப்படி எல்லாம் பொருளாதார தடை விதித்தார்கள் என்பதை மறக்க முடியுமா? சிலர் கடவுளைக் காட்டிலும், அறிவியல் தான் பெரியது என்று கூறிக் கொண்டு வந்தனர். ஆனால், இன்று கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி இந்த வல்லரசுகளை, அறிவியல் வல்லுனர்களை  தலை குனிய வைத்துவிட்டதே?   ஆயுதப் படையைக் காட்டியும், நவீன கண்டுபிடிப்புகளைக் காட்டியும், வல்லரசு என்று உலக மக்களை அச்சுறுத்தி  வந்த சீனா, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் இன்று கண்ணுக்குப் புலப்படாத ஒரு கிருமி முன்பு கைகட்டி, மண்டியிட்டு, "தயவு செய்து எங்களை வாழ" விடு என்று மன்றாடி வேண்டிக் கொண்டு இருக்கின்றனவே? ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அணுகுண்டுகளை வீசி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த அமெரிக்கா, அந்த மக்களின் துயரங்களை இன்றாவது ...

சாரு நிவேதிதா அவர்களின் வேற்றுலக வாசியின் டைரிக் குறிப்புகள் நூல் பற்றி...

Image
சாரு நிவேதிதா ஐயா அவர்களுக்கு, வணக்கம்.  தங்களின் வேற்றுலகவாசியின் டைரிக்குறிப்புகள் என்னும் நூலைப் படித்தேன். அருமை. மிக்க மகிழ்ச்சி.  இந்த நூலின் வாசகன் என்ற வகையில் சில கருத்துக்களை தங்கள் பார்வைக்கு வைக்கவும், சில கேள்விகளை எழுப்பவும் விரும்புகிறேன். இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் புதிய தலைமுறை வார இதழில் வெளிவந்தவை. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த  கட்டுரைகளில் பலவற்றை அப்பொழுதே படித்திருக்கிறேன். அப்பொழுது படிக்க வாய்ப்பு கிடைக்காத சில கட்டுரைகள் தற்பொழுது படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.   இந்த நூலில் தாங்கள் குறிப்பிட்டுள்ள 26 கட்டுரைகளில் பெரும்பாலானவை என் நெஞ்சத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பல்வேறு  எண்ணங்களின் வெளிப்பாடாகவே இருக்கின்றன. இந்தக் கட்டுரைகளில் தாங்கள் பதிவு செய்துள்ளவை பற்றி என் உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களை தங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்.  பல கட்டுரைகளில் மகாத்மா காந்தியின் போதனைகளையும் அவருடைய வாழ்க்கை நெறிகளையும் அனுபவங்களையும் சிறப்பாக குறிப்பிட்டுள்ளீர்கள்...

மாவட்ட நூலக அலுவலர்களுக்கு துணை இயக்குநர், இணை இயக்குநர், இயக்குநர் என்று பதவி உயர்வு அளிக்கப்படாதது ஏன்?

இன்று (6.3.2020) LIBRARIANS (TN) என்னும் வாட்ஸ் ஆப் குழுவில் பதிவு ஒன்றைப் படித்தேன். பதிவு அருமை. ஆனால், பதிவிட்டவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. Forwarded news ஆக இருக்கிறது. இது போன்ற துறை சார்ந்த விழிப்புணர்வு கொடுக்கும் பதிவுகளுக்கு பதிவிடுபவர் பெயர் இறுதியில் குறிப்பிடுவது நல்லது.  சரி.   பதிவைப் பற்றிய என்னுடைய கருத்தை இங்கு பதிவிட விரும்புகிறேன்.  பொது நூலகத் துறையில் காலியாக உள்ள இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர் போன்ற உயர் பதவிகள் பல ஆண்டுகளாகக் காலியாக இருப்பதாகவும்,  தகுதியுடைய மாவட்ட நூலக அலுவலர்களுக்கு பதவி உயர்வு மூலம் மேற்படி  பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அந்தப் பதிவில் எழுதியுள்ளார்.  மேற்காணும் பணியிடங்களில் நியமிக்க தகுதியுடைய  மாவட்ட நூலக அலுவலர் எவரும் இல்லை  என்பது பொறுப்பு இயக்குநரின் கருத்தாக இருக்கிறது என்றும், இது தவறு என்றும் இந்த பதிவை பதிவிட்டவர் குறிப்பிடுகிறார்.  ஆனால், தகுதியான நபர் ஒருவரும் நூலகத் துறையில் இல்லை என்று சொல்லப்படுகிறதே  அதுதான் உண்மை. இதைச் சொன்னால் நூலகர்கள் சொல்பவர்மீது ...

பத்திரிகை செய்திகள்.

Image
பத்திரிகை செய்திகள்.