Posts

Showing posts from May, 2021

பத்ம சேஷாத்ரி பள்ளி சம்பவம் - ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் ஒருவர் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது. அந்தச் செய்தியை ஏன் இவ்வளவு பெரிய தலைப்புச் செய்தியாக செய்தித்தாள்கள் வெளியிடுகின்றன?  தொலைக்காட்சிகளில் முதன்மைச் செய்தியாக தொடர்ந்து சில நாட்களாக வாசிக்கப்படுவது ஏன்?   அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது இதுபோன்ற புகார்கள் ஆண்டுக்கு ஒன்றிரண்டு வருவதை நாம் பார்க்கிறோம். இந்த புகார்கள் உண்மையானவையா? என்று விசாரணை செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  அதே வேளையில், புகார் கொடுக்கப்பட்டது என்பதற்காகவே சம்பந்தப்பட்ட ஆசிரியரை ஒரு குற்றவாளியாக சித்தரித்து 'அவன், இவன்' என்று ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவது வேதனை அளிக்கிறது.  சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதும் அமைச்சர்கள் மீதும் இது போன்ற பாலியல் புகார்கள் ஏற்கனவே வந்துள்ளன.  இந்த ஊடகங்கள் அந்தச் செய்திகளை இது போன்று முதன்மைச் செய்தியாக வெளியிடாதது ஏன்? ஆசிரியர்கள் என்றால் அவ்...

ஒரு சாமானிய மனிதனின் கேள்வி.

கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவதாக சொல்லப்படுகிறது. இந்த நோய்த் தொற்று காரணமாக வெளிநாடுகளில் அதிக அளவில் மக்கள் உயிரிழந்தார்கள் என்றார்கள்.   தற்போது நம் நாட்டிலேயே தினமும் ஆயிரக்கணக்கானோர் இறந்துகொண்டு இருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. இறந்த மக்களைப் புதைப்பதற்கு இடமில்லாததாலும்,  எரிப்பதற்கு வசதி இல்லாததாலும்  இறந்தவர்களின் உடல்கள் கங்கை ஆற்றில் வீசப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. மருத்துவமனையில் இடம் இல்லாததால், மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்னும் செய்திகளும் வந்துகொண்டு இருக்கின்றன.  என் நட்பு வட்டாரங்களில் சிலரை நான் இழந்துவிட்டேன். உறவினர்கள் சிலரையும் இழந்துவிட்டேன். அவர்களை அடக்கம் செய்தது எல்லாம் பொக்லைன் எந்திரங்கள் தான்.  அந்த துக்க நிகழ்வுகளுக்குக் கூட செல்ல முடியாத நிலை இன்று உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது.  இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டும் என்றும், நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூற...