Posts

Showing posts from October, 2022

நூலகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த...

" தமிழகத்தில் பொது நூலகங்களின் செயல்பாடுகள் மோசம்" என்று ஒரு முன்னணி செய்தித்தாளில் சில நாட்களுக்கு முன்பு செய்தி வந்தது. இந்த செய்தி பல்வேறு நூலகர் குழுக்களில் பதிவு செய்யப்பட்டது. இந்த பத்திரிக்கைச் செய்தி பற்றிய என்னுடைய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிப் பேசிய அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி , " நூலகத்துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை" என்று பேசினார்.   அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நூலகத் துறை நண்பர்கள் அந்த நிகழ்ச்சியை மறந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நூலகங்களின் செயல்பாடுகளை விமர்சித்து , பல ஆண்டுகளாக பத்திரிகைகள் பலவும் எழுதி வருகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த பத்திரிகைச் செய்தியையும் நான் பார்க்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக நூலகத்துறை கவனிப்பாரற்று இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் , இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு நூலகத்துறையின் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நூலகத்துறை இயக்குநர் பொறுப்புக்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் நியமிக்கப்பட்டது , இந்த அரசு நூலக...

நூலகர்களிடையே அதிகாரப் போட்டி!

-  சி. சரவணன். தரம் உயர்த்தப்பட்ட  முழுநேர கிளை நூலகங்களில் இரண்டு மூன்றாம் நிலை நூலகர்கள் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நூலகங்களில் பலவும் ஊதிய மைய நூலகங்களாக இருக்கின்றன. அதனால், ஊதிய மைய நூலகர் என்கின்ற அந்தஸ்திற்கு கடும் போட்டி எப்பொழுதும் உண்டு.  இரண்டு ஒரே நிலை (மூன்றாம் நிலை) நூலகர்கள் பணிபுரிகிறார்கள். இருப்பினும், இவர்களிடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது.  ஏன் இந்த போட்டி?  ஏனென்றால், ஊதிய மைய நூலகர் என்கின்ற அந்தஸ்து. இவர்  ஜென்ரல் ஷிப்டில் பணிபுரியலாம். காலை / மாலை ஷிப்ட்க்கு வரத் தேவையில்லை.   மேலும், ஊதிய மைய நூலகர் என்றால், ஒரு கெத்து - சில இடங்களில் அதிகார தோரணை -  மாவட்ட நூலக அலுவலர்களிடம் நெருங்கிய தொடர்பு -  இப்படி பல. அத்துடன் சில சலுகைகளும் உண்டு. அதனால் ஊதிய மைய நூலகர் பதவியை கைப்பற்றுவதில் சங்கங்களுக்கு இடையே போட்டி.  இதனால், ஊதிய மைய நூலகர் என்கின்ற இடத்திற்கு பல மாவட்டங்களில் கடும் போட்டி.   சமீபத்தில் ஒரு மாவட்டத்தில் ஊதிய மைய நூலகராக பணிபுரிந்த மூன்றாம் நிலை நூலகர் பணி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வ...

நூலகர்களும் ஆன்லைன் வருகைப் பதிவும்.

-       சி.சரவணன். நூலகங்கள் சரியாக இயங்குவதில்லை என்று பரவலாக பேசப்பட்டது. பத்திரிகைகள் சிலவும் அவ்வாறே எழுதி வந்தன. இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் வருகைப் பதிவு அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் சில நூலகர்கள் அச்சப்பட்டனர். போகப் போக சரியாகி விட்டது. ஆன்லைன் வருகைப்பதிவு விகிதம் அதிகரித்து உள்ளது. நூலக ப் பணியாளர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ‘நூலகர்கள் சரியாக வேலை செய்வதில்லை ’ என்று இனி எவரும் சொல்ல முடியாது. மாவட்ட நூலக அலுவலர்கள்கூட ‘ஏன் வேலைக்கு போகவில்லை ’ என்று கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நூலக ஆய்வாளர், மாவட்ட நூலக அலுவலர் ஆகியோர் நூலகங்களை திடீர் பார்வை செய்வதை குறைத்துக் கொண்டு, நூலகத்துறை மேம்பாட்டிற்கு தங்கள் நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.   தொழில்நுட்பச் சிக்கல்களும் ,   நடைமுறைச் சிக்கல்களும்: எந்த ஒரு தொழில்நுட்பத்தை நடைமுறைபடுத்தும்போதும் சில சிக்கல்கள் வருவதுண்டு. அந்த வகையில் நூலகர்...