எஸ் ஆர் ரங்கநாதன் விருதுக்கு நூலகர்கள் தேர்வு செய்யப்படுவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்!
ஆண்டுதோறும் நவம்பர் 14 முதல் 20-ம் தேதி வரை நாடு முழுவதும் நூலக வார விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சிறப்பாக பணிபுரியும் நூலகர்களுக்கு நூலகத் துறை சார்பில் டாக்டர் எஸ் ஆர் ரங்கநாதன் விருது வழங்கி கவுரவிக்கிறது. இந்த விருது மாவட்டத்திற்கு ஒரு நூலகர் என்று தேர்வு செய்து சென்னையில் நடைபெறும் விழாவில் கல்வித் துறை அமைச்சர் கையால் வழங்கப்படுவது வழக்கம். நூலகர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவது பற்றிய விமர்சனம் ஆண்டுதோறும் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்குக் காரணம் விருதுக்கு தேர்வு செய்யப்படும் முறையில் வெளிப்படைத் தன்மை இல்லாதது தான். எந்த ஒரு வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், மாவட்ட நூலக அலுவலர்கள் இரகசியமாக பரிந்துரை செய்யும் நூலகர்கள் பட்டியலை விழா குழு பரிசீலனை செய்து அறிவிப்பதாக சொல்லப்படுகிறது. பல மாவட்டங்களில் விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சரியான முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர் என்றும், சில மாவட்டங்களில் விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், முறையாக தேர்வு செய்யப்படுவதில்லை என்கின...