ஒழுங்கீனமான மாணவர்கள் - தீர்வு என்ன?
அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியரைத் தாக்கும் காட்சியையும், ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டு இருக்கும்போது மாணவர்கள் நடனமாடும் காட்சியையும் தொலைக்காட்சிகளில் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். இது, மாநிலத்தில் ஏதோ ஒரு பள்ளியில், ஒரு சில மாணவர்களால் நடந்தவை என்று பெரும்பாலோனோர் நினைக்கின்றனர். நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் நாளும் நடக்கும் காட்சிகள் இவை. ஆசிரியர்களின் இருசக்கர வாகனத்தின் டயரை ஊசியால் குத்தி பஞ்சர் செய்வதும், இருசக்கர வாகன இருக்கையை பிளேடால் கிழித்து நாசப்படுத்தும் சாதாரண நிகழ்வுகள். வகுப்பறையில் கேள்வி கேட்கும் ஆசிரியரை முறைப்பதும், தரக்குறைவாக பேசுவது சகஜம். ஆசிரியைகள் பாடம் நடத்தும்போது நடனமாடுவதும், பாலியல் நோக்கோடு பார்த்து சிரிப்பதும் உச்சக்கட்டம். மாணவர்களிடம் அடி வாங்கும் ஆசிரியர்களும் உண்டு; ஆபாச வார்த்தைகளை வாங்கும் ஆசிரியைகளும் ஒன்று. இவையெல்லாம் வெளியில் சொல்ல முடியாமல் அந்த ஆசிரியர், ஆசிரியை மனதோடு மூடி மறைத்து விடுகின்றனர். இவை எதுவும் பத்திரிகைகளில், காட்சி ஊடகங்களில் வெளிவருவது இல்லை. பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வர...