Posts

Showing posts from November, 2023

எளிய வாசகர் - உள்ளம் கவர்ந்த கருத்து.

Image
நேன்று நூலகத்தில் ஒரு நெகழ்ச்சியான சம்பவம் . அதைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .   கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்தூர் கிளை நூலகத்தில் நூலக வார விழா நடைபெற்றது . வழக்கம் போல , ‘நூலகத்தில் அதிக புத்தகங்கள் எடுத்து வாசித்த வாசகர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி ' நடைபெற்றது . பரிசு பெற்ற வாசகர்களுள் ஒருவரான திருமதி தமிழ்ச்செல்வி என்பவர் நேற்று மாலை நூலகத்துக்கு வந்தார் . நூலக விழா சிறப்பாக இருந்தது என்றும் , தனக்கு பரிசு வழங்கப்பட்டதற்கு நன்றி என்றும் கூறினார் .  " இது வழக்கமான நிகழ்ச்சிதான் , இதற்கு , எதற்கு நன்றி ?" என்றேன் .  " டாக்டர் சந்திரசேகரன் கையால் எனக்கு பரிசு கிடைத்தது மகிழ்ச்சி " என்றார் . " இந்த நன்றியையும் மகிழ்ச்சியும் அன்றே கூறி இருக்கலாம் . ' ஏதாவது பேசுங்கள் ' என்று அழைத்தேன் . நீங்கள் பேச மறுத்து விட்டீர்கள் !" என்றேன் . " கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அதிகம் படித்தவர்கள் என்பதால், எனக்கு பேச தயக்கமாக இருந்தது . இருந்தாலும் ‘என் மனதில் சொல்ல வேண்டும் என்று இருக்கிறதை’ உங்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று ...

நூலக வார விழா பற்றி - எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

நூலக மனிதர்கள் - நீண்டகால வாசகர் (எழுத்தாளர்  எஸ். ராமகிருஷ்ணன் ) நூலகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை விழா நடப்பது வழக்கம். அந்த நாளில் சிறப்புரைக்காகத் தமிழ் அறிஞர்கள் எவரையாவது அழைப்பார்கள். அன்று புத்தக அறிமுகம் செய்து வைக்கும் சிற்றுரைகளும் நடைபெறும். நூலகப்பணியாளர்கள் மற்றும் புரவலர்கள் கௌரவிக்கப்படுவார்கள். அப்படி ஒரு விழா நடக்கும் போது நீண்டகால வாசகர் ஒருவருக்குப் பாராட்டுச் செய்யலாம் என்ற யோசனையைச் சொன்னேன். நூலகர் அதை உடனே ஏற்றுக் கொண்டார். எந்த ஆண்டு முதல் உறுப்பினராக இருக்கிறார்கள் என்பதுடன் எவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து நூலகத்திற்கு வருகை தருகிறார்கள் என்பதையும் வைத்து இருவரை நூலகர் தேர்வு செய்திருந்தார். அவர்களில் ஒருவர் உடல்நலமில்லை எனவே கலந்து கொள்ள இயலாது என்றார். ஆகவே ரத்தினசாமி என்ற நீண்டகால வாசகருக்குப் பாராட்டு விழா நடத்துவது என்று முடிவு செய்தார்கள். இதைப்பற்றி ரத்தினசாமியிடம் சொன்னபோது “அதெல்லாம் எதுக்கு“ என்று மறுத்தார். “நாற்பது வருஷமா லைப்ரரிக்கு வந்துட்டு இருக்கீங்க. இது சாதாரண விஷயமில்லை சார். உங்களை கௌரவப்படுத்துவது எங்களுக்குப் பெருமை“ என்றார் நூலகர் ரத்தினசாமி ...