உயர் நீதிமன்றத் தீர்ப்பு நூலகர்களுக்கு பின்னடைவா? இனி என்ன செய்யலாம்?
வழக்கு விவரம்: 1990, 97, 98, 99, 2000 ஆண்டுகளில் பகுதி நேர, ஊர்ப்புற நூலகர்களாக நியமிக்கப்பட்டவர்கள் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் நாள் மூன்றாம் நிலை நூலகர்களாக பணி ஈர்க்கப்பட்டனர். இவர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் கொடுத்து இருந்தனர். அதில் "நாங்கள் மூன்றாம் நிலை நூலகர்களாக பணியமற்றப்பட்ட நாளிலிருந்து தான் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, நாங்கள் ஊர்ப்புற நூலகர்களாகப் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு, அந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் முடிந்த நாள் மூன்றாம் நிலை நூலகர்களாக பணியமர்த்தப்பட்டதாகக் கருதி, பணிவரன்முறை செய்து, பணப்பலன் உட்பட இதர சலுகைகள் வழங்க வேண்டும்" என்று கோரி இருந்தனர். இந்த வழக்கிற்கு இவர்கள் வைத்த வாதம்: "அரசாணை 156 பள்ளிக்கல்வி (கே 2 ) நாள் 10/ 9/1998ல் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள். (Guidelines) அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரையிலும் இட ஒதுக்கீடு இன சுழற்சி அடிப்படையிலும் முறையான பணிநியமன விதிமுறைகளின்படி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளோம். அதனால், நாங்கள் ப...