நூலகங்களுக்கான பருவ இதழ்கள் ஆன்லைன் பதிவேற்றமும், நடைமுறைச் சிக்கல்களும்
‘நூலகங்களுக்கு நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் கொள்முதல் செய்யும் பொழுது வெளிப்படைத் தன்மை வேண்டும், வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ற அவை வாங்கப்பட வேண்டும்’ என்பது நீண்டகால விவாதப் பொருளாக இருந்தது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. அதுதான் வெளிப்படையான நூல் கொள்முதல் கொள்கை, 2024. இதன்படி, இனி நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்கள் மட்டுமல்லாது, பருவ இதழ்களும் வாசகர்களின் கருத்தறிந்து நூலகர்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் என்பதாகும். இதன் தொடக்கமாக, கடந்த வாரம் பொது நூலக இயக்குநர் அவர்களின் அறிவிப்பு அமைந்தது. வாசகர்கள் விரும்பிப் படிக்கும் பருவ இதழ்கள் பற்றிய பதிவேடு ஒன்று நூலகங்களில் உடனடியாக பராமரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. நகர்ப்புற நூலகங்களில் இந்த பதிவேடு பராமரிக்கப்பட்டு, வாசகர்கள் தங்கள் விருப்பமான பத்திரிகைகளை எழுதி வைத்தனர். அடுத்த ஓரிரு நாட்களில், பொது நூலக இணையதளத்தில் நூலகங்களுக்கான பருவ இதழ்கள் பதிவேற்றம் செய்யும் portal தொடங்கப்பட்டது. இந்த போர்டலில் நூலகர்கள், வாசகர் வட்டத்...