Posts

Showing posts from June, 2021

மாணவிகளுக்கு நடைபெறும் திருமணங்கள் - அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?

தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீண்ட காலமாக 18 வயது நிறைவடையாத பள்ளி மாணவிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.  இந்த கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த ஓராண்டாகப் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதில்லை. இந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு அங்கொன்றும், இங்கொன்றும் எனத் திருமணங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளில் 7 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இந்த ஆண்டில் திருமணம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், பல மாணவிகளுக்கு திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. 18 வயது நிறைவடையாத பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று அனைவரும் அறிவர். அப்படி இருந்தும் கிராமங்களில் சிறுமிகளுக்குத் திருமணங்கள் நடந்து வருவது தொடர்கிறது. இதுபோன்ற திருமணங்கள் மண்டபங்களிலோ, வீடுகளிலோ நடைபெறுவதில்லை. பெரும்பாலும் கோவில்களில் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் நடைபெறுகின்றன. கோவில் நிர்வாகத்துக்கும், பூசாரிக்கும் இளம் வயது திருமணம்  தவறு என்ற...

தொடர்ச்சியாக நூலகர்களின் மரணச்செய்தி - ஏன் இந்த அவல நிலை?

அண்மைக்காலமாக நூலகர்களின்  இறப்புச்செய்தி சமூக ஊடகங்களில் அவ்வப்போது வந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.  இதுவரை 12 க்கும் மேற்பட்ட நூலகர்கள் இறந்து விட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. தமிழகத்தில் மொத்தம் 5 ஆயிரம் நூலகர்கள்தான் இருப்பார்கள். இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் உள்ள நூலகர்களில் ஏன் இத்தனை மரணங்கள்? ஆசிரியர்கள் இப்படி இறந்ததாகச்  செய்திகள் இல்லையே? அப்படியே ஒன்றிரண்டு செய்திகள் வந்தாலும் அது அவர்களின் மொத்த எண்ணிக்கையில் மிக மிகக் குறைவே. கொரோனா  வைரஸின் முதல்  பரவல் முடிந்ததாக தவறாக செய்தி பரப்பப்பட்டது. ஆனால், இரண்டாவது அலை வரலாம் என்று மருத்துவ வல்லுநர்களால் சொல்லப்பட்டது. அதை யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.    மார்ச் மாதத்தில் மருத்துவர்கள், மருத்துவ துறை பணியாளர்கள், காவல் துறை பணியாளர்கள், சுகாதார துப்புரவு பணியாளர்கள் முதலான முன் களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டும் என்று மருத்துவத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது....