Posts

Showing posts from March, 2020

சாரு நிவேதிதா அவர்களின் வேற்றுலக வாசியின் டைரிக் குறிப்புகள் நூல் பற்றி...

Image
சாரு நிவேதிதா ஐயா அவர்களுக்கு, வணக்கம்.  தங்களின் வேற்றுலகவாசியின் டைரிக்குறிப்புகள் என்னும் நூலைப் படித்தேன். அருமை. மிக்க மகிழ்ச்சி.  இந்த நூலின் வாசகன் என்ற வகையில் சில கருத்துக்களை தங்கள் பார்வைக்கு வைக்கவும், சில கேள்விகளை எழுப்பவும் விரும்புகிறேன். இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் புதிய தலைமுறை வார இதழில் வெளிவந்தவை. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த  கட்டுரைகளில் பலவற்றை அப்பொழுதே படித்திருக்கிறேன். அப்பொழுது படிக்க வாய்ப்பு கிடைக்காத சில கட்டுரைகள் தற்பொழுது படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.   இந்த நூலில் தாங்கள் குறிப்பிட்டுள்ள 26 கட்டுரைகளில் பெரும்பாலானவை என் நெஞ்சத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பல்வேறு  எண்ணங்களின் வெளிப்பாடாகவே இருக்கின்றன. இந்தக் கட்டுரைகளில் தாங்கள் பதிவு செய்துள்ளவை பற்றி என் உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களை தங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்.  பல கட்டுரைகளில் மகாத்மா காந்தியின் போதனைகளையும் அவருடைய வாழ்க்கை நெறிகளையும் அனுபவங்களையும் சிறப்பாக குறிப்பிட்டுள்ளீர்கள்...

மாவட்ட நூலக அலுவலர்களுக்கு துணை இயக்குநர், இணை இயக்குநர், இயக்குநர் என்று பதவி உயர்வு அளிக்கப்படாதது ஏன்?

இன்று (6.3.2020) LIBRARIANS (TN) என்னும் வாட்ஸ் ஆப் குழுவில் பதிவு ஒன்றைப் படித்தேன். பதிவு அருமை. ஆனால், பதிவிட்டவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. Forwarded news ஆக இருக்கிறது. இது போன்ற துறை சார்ந்த விழிப்புணர்வு கொடுக்கும் பதிவுகளுக்கு பதிவிடுபவர் பெயர் இறுதியில் குறிப்பிடுவது நல்லது.  சரி.   பதிவைப் பற்றிய என்னுடைய கருத்தை இங்கு பதிவிட விரும்புகிறேன்.  பொது நூலகத் துறையில் காலியாக உள்ள இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர் போன்ற உயர் பதவிகள் பல ஆண்டுகளாகக் காலியாக இருப்பதாகவும்,  தகுதியுடைய மாவட்ட நூலக அலுவலர்களுக்கு பதவி உயர்வு மூலம் மேற்படி  பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அந்தப் பதிவில் எழுதியுள்ளார்.  மேற்காணும் பணியிடங்களில் நியமிக்க தகுதியுடைய  மாவட்ட நூலக அலுவலர் எவரும் இல்லை  என்பது பொறுப்பு இயக்குநரின் கருத்தாக இருக்கிறது என்றும், இது தவறு என்றும் இந்த பதிவை பதிவிட்டவர் குறிப்பிடுகிறார்.  ஆனால், தகுதியான நபர் ஒருவரும் நூலகத் துறையில் இல்லை என்று சொல்லப்படுகிறதே  அதுதான் உண்மை. இதைச் சொன்னால் நூலகர்கள் சொல்பவர்மீது ...